பருத்தித்துறை தட்டாதெரு மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்ககள் துவிச்சக்கரவண்டிகள்
மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன.
இதில் நல்லைக் கந்தன் தண்ணீர்ப் பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் 50000.00 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொ.கஜேந்திரகுமார் கலந்துகொண்டார்.